Thursday, 27 October 2016

மக்காவிற்கு உம்ராவுக்குச் சென்ற ஒரு தமிழரின் உண்மையான கவலையின் விளைவு, இன்று இரண்டு பள்ளிகளிலும் செய்யப் படும் உரைகள் 38 மொழிகளில் உடனுக்குடன் மொழியாக்கம் செய்யப்படுகின்றது.


நாகர் கோவில் வாசியான சலாஹுதீன் அமெரிக்காவில் NAZTEC என்ற நிறுவனத்தின் அதிபராகவும், சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் உள்ளார். அமெரிக்காவில் வோட்டுப் போடும் இயந்திரமும் மற்றும் புயல் சூறாவளி முன்னெச்சரிக்கை ஆன்ட்டனாக்களும் இவரின் கம்பெனி சார்பாக நிறுவி வருகின்றனர். பழகுவதற்ற்கு மிகவும் இனிமையாகவும், மிக மிக எளிமையாகவும் செயல்படும் இளைஞ்சர்.

ஒரு முறை உம்ராவிற்கு சென்றபோது, மக்காவிற்குச் செல்லக் கூடிய மக்களில் 70% அதிகமானோர் அரபு மொழி அறியாதவர்களே. அங்கே செய்யப்படும் பிரசங்கத்தை எப்படி மக்கள் புரிந்து கொள்வது என்பதை பற்றிய இவரின் ஆராய்ச்சி இதற்கான சிறப்பு ஆன்டெனாக்களை கண்டுபிடிக்கத் தூண்டியது.

சவூதி அரசின் கோரிக்கை எதுவுமில்லாமல் தன்னுடைய அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி இவருடைய தலைமையிலான ஒரு குழு மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த ஆன்டெனாக்களைக் கண்டுபிடித்து உள்ளனர்.

தன்னுடைய கண்டுபிடிப்பை தான் அறிந்த பல சவூதி மக்களின் மூலம் 4 வருடங்கள் தொடர்ந்தது முயற்சி செய்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இறுதியாக, அல்லாஹ்வின் நாட்டப்படி 2014ம் ஆண்டு, ஹரமின் நிர்வாகிகளில் ஒருவரைச் சந்த்தித்ததன் மூலம் பலன் கிடைத்தது.

இதற்காகவே தனி டிபார்ட்மென்ட் உருவாக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கியது. அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, இறுதியில் மக்கா, மதீனாவில் செயல் பட தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment